Monday, November 17, 2014

ஈரோடு திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பின் தேர்வு - நிறைவு - 16-11-2014

வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈரோடு கல்வி மையக் கிளையில் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பில் பங்குகொண்ட 50 மேற்பட்ட மாணவர்கள் அதற்கான தேர்வை எழுதினார்கள்.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் கேள்வித்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு துவங்கியது.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், மேனாள் கல்விதுறை இணைஇயக்குனர் திரு. இராம. பாண்டுரங்கன் அவர்கள் தேர்வினை நேரில் பார்வையிட்டார்கள்.

ஈரோடு கல்வி மையக் கிளையின் பயிற்றுனர் திருமதி. பா. ராஜேஷ்வரி அம்மையார் தேர்வு கண்காணிப்பு மற்றும் உதவிப் பணிகளை மேற்கொண்டார்.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளர் திரு. பாலசுப்பிரமணியன் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.



No comments: